மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்


மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 10 Jan 2023 2:43 AM GMT (Updated: 10 Jan 2023 4:26 AM GMT)

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ்பெற்றவை. இதில் முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுகான முன்பதிவு இன்று தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இணையத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

மாடுபிடி வீரர்கள் கொரோனா தடுப்பூசி சான்று, வயது சான்று, போட்டோ ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கும் முன்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காளையுடன் இருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும், இருவரும் இரு தவணை கொரோனா சான்று பதிவேற்றவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நண்பகல் 12 மணி முதல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story