நகை திருடிய சிறுவன் கைது

நகை திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் மலைராஜ் (வயது 36). இவரது வீட்டில் பீரோவில் இருந்த தங்க சங்கிலி திருட்டு போனது. இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவனை கைது செய்தனர். இதே சிறுவன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மற்றொரு வீட்டில் குத்துவிளக்கை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





