தடை செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பறிமுதல்
x

தடை செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

சமயபுரம்:

திருப்பைஞ்சீலியில் நேற்று நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றதையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊதுகுழல்களை விற்கக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் அதனை மீறி அப்பகுதியில் நேற்று கடைவீதி, கோவிலுக்கு பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஊதுகுழல்கள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பைஞ்சீலி புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஊதுகுழல்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் அவற்றை விற்பனை செய்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story