செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை


செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை
x

செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் சொரிமுத்து. இவர் செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 15). இவன் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தான். வசந்தகுமார் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவான். இந்தநிலையில், காலையில் வேலைக்கு சென்றிருந்த சொரிமுத்து வேலை முடிந்த பின்னர் நேற்று மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது வசந்தகுமார் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வசந்தகுமார் வீட்டின் அருகில் இருந்த அரளிச்செடியில் காய்களை பறித்து அரைத்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டான்.


Next Story