பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு


பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு
x

பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர்

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிகாடு பகுதியில், ரமலான் மாதத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் முதல் முஸ்லிம்கள் நோன்பு இருந்து வருகின்றனர். அதிகாலை நோன்பு தொடங்கி, மாலையில் நோன்பு திறக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை 6.32 மணியளவில் லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் உள்ள மேற்கு ஜாமியா பள்ளிவாசல், கிழக்கு ஓட்டப்பள்ளிவாசல், கிழக்கு ஜும்மா பள்ளிவாசல், தைக்கால் பள்ளிவாசல், பிலால் பள்ளிவாசல், தாருஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல், மேற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல், கிழக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் என 8 பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் நோன்பு திறந்தனர்.


Next Story