திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயம்


திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயம்
x

திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயமானார்.

திருச்சி

திருச்சி மன்னார்புரம் காஜாநகர் பகுதியை சேர்ந்தவர் சபரிநாத் (வயது 25). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சித்ராதேவி (22). இவர்களுக்கு கடந்த மே மாதம் 25-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி காலை சபரிநாத் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சித்ராதேவியை காணவில்லை. அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து சபரிநாத் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து திருமணமான 1½ மாதத்தில் மாயமான புதுப்பெண் சித்ராதேவியை தேடி வருகிறார்.


Next Story