வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
x

அரக்கோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த அம்மாவார்த்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 56). கணவரை இழந்த இவர் தனியாக வசிக்கிறார்.

இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் திருமணமாகி இருக்கும் தனது மகள் வீட்டிற்கு கடந்த மாதம் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஈஸ்வரி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story