பஸ் வசதி வேண்டும்

பஸ் வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், காசான்கோட்டை, சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் வழியாக அரியலூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளிகள் அதனை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த பல மாதங்களாக அரசு பஸ் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கும்பகோணத்தில் இருந்து அரியலூர் வரை மேற்கண்ட பகுதி வழியாக அரசு பஸ் தினமும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





