இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை


இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 7 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
x

வாக்கு எண்ணிக்கை பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிலையில், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி அந்த கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளான எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய இடங்களில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறை, வாக்கு எண்ணிக்கை அறைகளை சுற்றி துணை ராணுவப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்புப்படை துப்பாக்கி ஏந்திய வீரர்கள், ஆயதப்படை மற்றும் ஈரோடு மாவட்ட போலீசார் என்று மொத்தம் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story