மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் வழங்க பரிசோதனை முகாம்

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச உதவி கருவிகள் வழங்குவதற்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 76 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, முட நீக்கியல் நிபுணர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரடியாக மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்தனர். இந்த முகாமின் முடிவில் 40 மாற்றுத்திறனாளிகள் இலவச உதவி கருவிகள் பெற தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





