ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?


ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?
x

ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?

திருவாரூர்

முத்துப்பேட்டை இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைக்கா கோரையாறு

முத்துப்பேட்டை தாலுகா இடும்பாவனத்தில் மறைக்கா கோரையாறு உள்ளது. மேலபெருமழை, பள்ளிமேடு, தில்லைவிளாகம், தொண்டியக்காடு, இடும்பாவனம் போன்ற பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்களுக்கு இந்த ஆற்றின் மூலம் தான் தண்ணீர் செல்கிறது. கடைமடை பகுதிகளான இப்பகுதியில் நேரடி நெல்விதைப்பு மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாதவாறு ஆகாயதாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது.

ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?

இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தண்ணீர் திறப்பதற்கு முன்பே ஆற்ைற ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றவில்லை. தற்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இருந்தும் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடும்பாவனம் மறைக்கா கோரையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story