பருவமழை வேண்டி குத்துவிளக்கு பூஜை


பருவமழை வேண்டி குத்துவிளக்கு பூஜை
x

பருவமழை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

கரூர்


கரூர் மாவட்டம், தோகைமலை மகா மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு 1,650 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மகா மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து தோகைமலை பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இதில் கலந்துகொண்டு பருவமழை வேண்டியும், வறுமை ஒழிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டியும், தொழில் வளம், கல்வியில் சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை, உறவினர்கள் ஒற்றுமை வேண்டி ஐந்து முக பித்தளை குத்து விளக்குகளை ஏற்றி பூஜை செய்தனர். இதில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story