கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x

குலசேகரன்பட்டினத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உடன்குடி தேரியூர் மின்சார வாரிய அலுவலகம் பின்புறம் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேர் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை பிடித்தனர். விசாரணையில், குலசேகரன்பட்டினம் காவடி பிறை தெருவை சேர்ந்த மகராஜன் மகன் கருப்பசாமி (வயது 30) என்பதும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 85 கிராம் கொண்ட 15 கஞ்சா பாக்கெட்டுகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்கள் உடன்குடி தேரியூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சசிகுமார், சரத் என்ற சரத்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகிறார்.


Next Story