கார் மோதி வக்கீல் பலி


கார் மோதி வக்கீல் பலி
x

விக்கிரவாண்டியில் கார் மோதி வக்கீல் பலி

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பிரகதீஸ்வர் (வயது 30), வக்கீல். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு புறப்பட்டார். விக்கிரவாண்டி தெற்கு புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரகதீஸ்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த பிரகதீஸ்வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story