கார் டிரைவர் தற்கொலை


கார் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2022 5:52 PM GMT (Updated: 4 Aug 2022 6:10 PM GMT)

வடமதுரை அருகே கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர் ஸ்ரீபதி (வயது 50). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி (45) என்ற மனைவியும், ஹரிஸ் (14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீபதி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த ஸ்ரீபதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story