முதியவரை தாக்கிய கார் டிரைவர் கைது


முதியவரை தாக்கிய கார் டிரைவர் கைது
x

முதியவரை தாக்கிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை செங்குந்தர் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). கார் டிரைவரான இவர் அதேபகுதியில் மது போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டு அந்த வழியாக சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம்(70) என்பவர் சுரேஷை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தர்மலிங்கத்தை உருட்டு கட்டையால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தர்மலிங்கம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story