செந்துறை அருகே கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி


செந்துறை அருகே கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி
x

செந்துறை அருகே கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

அரியலூர்


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது36). இவர் ஆண்டிமடம் பகுதியில் உள்ள உறவினர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டம் செந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இவர் செந்துறை அருகே உள்ள மருதூர் பகுதியில் வந்த போது ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த தூக்கி வீசப்பட்டதில் ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story