தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்து

தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பகுதியில் உள்ள சஞ்சீவிராய பள்ளி எதிரே காவேரிப்பாக்கம் - பாணாவரம் செல்லும் சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றுவருகிறது.
இந்த பணியின் காரணமாக சாலையின் குறுக்கே மண் கொட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு கார் மண் மீது ஏறி தலைகீழாக கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 4 பேருக்கு எந்தவித காயமும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் விரைந்து வந்து காரில் பயணித்தவர்கள் யார் என்பது குறித்தும், சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





