வரதட்சணை புகாரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு


வரதட்சணை புகாரில் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Sep 2023 7:00 PM GMT (Updated: 9 Sep 2023 7:01 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சாருமதி (வயது 26). இவருடைய கணவர் அருண்பாரத் (31). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது வரதட்சணை வேண்டாம் என்று கூறிய அருண்பாரத் குடும்பத்தினர் பின்னர் கார் மற்றும் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் சாருமதி குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்த நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக அவர் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இதைத் தொடர்ந்து அருண்பாரத் மற்றும் அவருடைய பெற்றோர் தீர்த்தமலை (55), காந்த ரூபி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story