பெயிண்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


பெயிண்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x

உடன்குடி அருகே பெயிண்டரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி முருகன் காலனியை சேர்ந்த சுடலையாண்டி மகன் மணிகண்டன் (வயது 47). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த 8-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் உடன்குடியில் கடைக்கு சென்று விட்டு தனது நண்பர் மணி என்பவரை பார்ப்பதற்காக உடன்குடி சாதர்கோன்விளை உச்சினிமாகாளி அம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சாதர்கோன்விளையை சேர்ந்த பெருமாள் மகன் முத்துகிருஷ்ணன், சிவன் மகன் கோவிந்தன் ஆகிய இருவரும் மணிகண்டனை வழிமறித்து கீழே தள்ளி விட்டு தகராறு செய்தனர். பின்னர் அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து மணிகண்டனை தாக்கினர். இதில் மணிகண்டன் காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவும் கீழே கிடந்த கல்லை எடுத்து அங்கு நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து விட்டு மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story