சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு


சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
x

ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (வயது 35). இவர் கார் விபத்தில் நேற்று முன்தினம் பலியானார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 30 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story