பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது வழக்கு

பள்ளிபாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய பள்ளிபாளையம், ஆவத்திபாளையத்தை சேர்ந்த 7 பேரை பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.2,050 பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





