சொத்து பிரச்சினையில் மோதல் 9 பேர் மீது வழக்கு


சொத்து பிரச்சினையில் மோதல் 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Jun 2022 5:10 PM GMT (Updated: 24 Jun 2022 5:28 PM GMT)

சொத்து பிரச்சினையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

சாமல்பட்டி அருகே கூர்சாம்பட்டியை சேர்ந்தவர் திம்மராயன் (வயது 72). விவசாயி. இவருடைய மகன் வெங்கட்ராஜ் (50). இவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி திம்மராயன் தரப்பில் 5 பேர் மீதும், வெங்கட்ராஜ் தரப்பில் 4 பேர் மீதும் என 9 பேர் மீது வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.


Next Story