மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:45 PM GMT)

தேனி அருகே போலீசில் புகார் கொடுத்ததால் மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 29). இவருடைய மனைவி முத்தீஸ்வரி (19). கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முத்தீஸ்வரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தார். தன் மீது புகார் கொடுத்ததால் கருப்பசாமி தனது மனைவியிடம் நேற்று முன்தினம் தகராறு செய்து அவரை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார். அதன்பேரில் கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story