போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் மீது வழக்கு


போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் மீது வழக்கு
x

போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பூசலங்குடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(வயது 51). இவர் கடந்த 15-ந் தேதி சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்ைட இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மணி(54) என்பவரது பெயரில் போலி பாஸ்போர்ட்டை பெற்று சிங்கப்பூர் செல்ல முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story