புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு


புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
x

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புன்னம் சத்திரம் அருகே உப்பு பாளையம் இந்திரா நகர் காலனியில் உள்ள ஒரு பெட்டி கடையில் அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 40) என்பவர் புகையிைல பொருட்கள் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story