ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது


ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளர் கைது
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவையில் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.6 லட்சம் மோசடி செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

உணவு தயாரிப்பு நிறுவனம்

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவர் தண்ணீர்பந்தல் பகுதியில் தனது சகோதரர் மற்றும் தந்தை தங்கவேலுடன் இணைந்து சொந்தமாக உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இங்கு நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு அண்ணாநகரை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் சுரேந்தர் (31) காசாளராக பணியாற்றி வந்தார்.

ரூ.6 லட்சம் மோசடி

இந்தநிலையில் இந்த உணவு தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணக்கு விவரங்களை தணிக்கை செய்தனர்.

அதில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உணவு நிறுவன வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 5 ஆயிரத்தை சுரேந்தர் தனது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து உணவு தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கிருஷ்ண குமார் அளித்த புகாரின் பேரில் சுரேந்தர் மீது மோசடி, நம்பிக் கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சுரேந்தரை கைது செய்தனர்.

1 More update

Next Story