பழங்குடியினர் 14 பேருக்கு சாதி சான்றிதழ்


பழங்குடியினர் 14 பேருக்கு சாதி சான்றிதழ்
x

திருவாரூரில் பழங்குடியினர் 14 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 250 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் பகுதியை சேர்ந்தவர்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையில் பழங்குடியினரான இந்து ஆதியன் பிரிவை சேர்ந்த 14 பேருக்கு சாதி சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story