திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் - மார்ச் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது


திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் - மார்ச் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது
x

திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி முகாம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

திருவள்ளூர்

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டு தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல், போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும். பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியம் ஆகும்.

சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 84 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முகாம் வரும் மார்ச் 1-ந் தேதி முதல் மார்ச் 21-ந் தேதி வரை மொத்தம் 21 நாட்களுக்கு முகாம்கள் நடைபெற உள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றிற்கு கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story