குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்


குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
x

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் குறுவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது.

அரியலூர்

குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கோகோ மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் 14, 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. போட்டியின் நடுவராக தினேஷ்குமார், செல்வம், இளவரசன், ரமேஷ், கலையரசி, ஜோஸ்பின் மேரி ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்தனர்.


Next Story