காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

சிவகிரியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தென்காசி

சிவகிரி:

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தென்காசி மாவட்ட ஓ.பி.சி. அணி சார்பாகவும், சிவகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பாகவும் சிவகிரி பஸ்நிலையம் அருகே 7-ம் திருநாள் மண்டகப்படி சந்திப்பு பகுதியிலும், காந்தி கலையரங்கம் முன்பாகவும், முனீஸ்வரர் கோவில் சந்திப்பு பகுதியிலும் பட்டாசுகள் வெடித்தும், லட்டுகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஓ.பி.சி. அணித்தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story