செல்போன் திருடியவர் கைது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
சங்கராபுரம் தாலுகா அருளம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கார்த்திக்(வயது 21). இவர், தனது மனைவியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர், காத்திருப்போர் அறையில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டார். அப்போது அவரது செல்போனை க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சரவணன்(39) என்பவர் திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





