மத்திய தொழில் பாதுகாப்பு படை, போலீசார் கொடி அணிவகுப்பு


மத்திய தொழில் பாதுகாப்பு படை, போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 3 Sept 2023 12:30 AM IST (Updated: 3 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தென்காசி

செங்கோட்டை:

வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் ஒன்றிணைந்து கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கொடி அணிவகுப்பில் 45 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 103 காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story