நில அளவர் மற்றும் வரைவாளர் காலிப்பணியிடம் வருகிற 23-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு - டி.என்.பி.எஸ்.சி தகவல்


நில அளவர் மற்றும் வரைவாளர் காலிப்பணியிடம் வருகிற 23-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு - டி.என்.பி.எஸ்.சி தகவல்
x

நில அளவர் மற்றும் வரைவாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-

நில அளவர், வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தப் பதவிகளுக்கான 2-ம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை சென்னை பாரி முனையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விபரங்களை, www.tnpsc.gov.inஎன்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story