திருவிழாவில் பெண்களிடம் நகைப்பறிப்பு


திருவிழாவில் பெண்களிடம் நகைப்பறிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:45 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி அருகே உள்ள பெரியகுரும்பட்டியில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தர்மபுரியை சேர்ந்த கல்யாணி (வயது 60), காளியம்மாள் (45) ஆகியோரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 9 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற 3 பெண்களை தேடி வருகின்றனர்.


Next Story