மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

தெற்க்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவள்ளூர்

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 8.20 மணி, 9.50 மணி மற்றும் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) கடம்பத்தூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்டிரல்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்டிரல்-திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை திருவள்ளூர்-திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணி, சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.45 மணி, சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணி, சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணி, ஆவடி-சென்டிரல் இடையே காலை 4.25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* அரக்கோணம்-சென்டிரல் இடையே காலை 10 மணி, 11.10 மணி, மதியம் 12 மணி, 1.50 மணிக்கும், திருத்தணி-சென்டிரல் இடையே 10.15 மணி, மதியம் 12.35 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்களுக்கு பதிலாக இன்று மற்றும் நாளை காலை 10.25 மணி, 11.35 மணி, மதியம் 1.25 மணிக்கு கடம்பத்தூர்-சென்டிரல் இடையேயும், காலை 11.10 மணி, மதியம் 12.35 மணிக்கு திருவள்ளூர்-சென்டிரல் இடையேயும், மதியம் 1.50 மணிக்கு அரக்கோணம்- சென்டிரல் இடையேயும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story