முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்க்கண்ட முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம்.

* மதுரை -ராமேசுவரம் (வண்டி எண்: 06651) இடையே காலை 6.35 மணிக்கும், ராமேசுவரம்-மதுரை (06656) இடையே மாலை 6.05 மணிக்கும், திருச்செந்தூர்-திருநெல்வேலி (06674) இடையே காலை 7.10 மணிக்கும், திருநெல்வேலி-திருச்செந்தூர் (06677) இடையே மாலை 6.45 மணிக்கும்,

செங்கோட்டை-திருநெல்வேலி (06682) இடையே காலை 6.40 மணிக்கும், திருநெல்வேலி-செங்கோட்டை (06657) இடையே மாலை 6.15 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 30-ந்தே தியில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

* கோவை -மேட்டுப்பாளையம் (06816) இடையே மதியம் 3.45 மணிக்கும், மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம்-கோவை(06813) இடையே காலை 10.55 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெ யில்கள் வருகிற 23-ந்தே தியில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story