தூத்துக்குடியில் பரபரப்பு: வீட்டிற்கு தீவைப்பு, கார், பைக், சி.சி.டி.வி கேமிராக்கள் உடைப்பு...!


தூத்துக்குடியில் பரபரப்பு: வீட்டிற்கு தீவைப்பு, கார், பைக், சி.சி.டி.வி கேமிராக்கள் உடைப்பு...!
x

ஸ்ரீவைகுண்டத்தில் வீட்டிற்கு தீவைத்து, கார், ஆட்டோ, சி.சி.டி.வி கேமிராக்கள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஶ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார்தோப்பு பகுதிகளில் இன்று நள்ளிரவு 1 மணியளவில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த சக்திவேல், பேச்சு முத்து, முருகன் ஆகியோரது 3 மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து மர்மநபர்கள் தீ வைத்து உள்ளனர்.

இதேபோன்று, கே.டி.கே நகர் பகுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்கும் தீ வைத்துள்ளனர். அதனை கண்டு அதிர்ச்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீணை அணைத்துள்ளனர்.

இந்த நிலையில் மேலகோட்டைவாசல் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கணேசன், ராமர் ஆகியோரது 2 கார்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் அருவாளை கொண்டு அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும், நல்லபெருமாள் என்ற ராஜா என்பவரது கேஸ் சிலிண்டர் ஏற்றி செல்லும் லோடு ஆட்டோவின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள், அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமிராக்களையும் உடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.மாயவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு சி.சி.டி.வி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஶ்ரீவைகுண்டம் பிச்சனார்தோப்பு, கே.டி.கே.நகர், மேல கோட்டைவாசல் பகுதிகளில் பல்வேறு சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த வன்முறை சம்பவங்களால் அப்பகுதியில் பதட்டமான சூழல்நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story