வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர், பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 9-ந் தேதி கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. 16-ந் தேதி மறு காப்பு கட்டுதலும் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை தினமும் மாலை சப்பாரம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னபட்சி வாகனம், யானை மற்றும் பூந்தேர் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 23-ந் தேதி மாலை வடிசோறு மற்றும் வெட்டும் குதிரையில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று திருத்தேர் திருவிழாவையொட்டி பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) காலை அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும், மாலை பொங்கல் மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் ஆற்றில் விடுதலும், 28-ந் தேதி காலை மஞ்சள் நீராடலும், மாலை முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story