ஒகளூரில் தேரோட்டம்

ஒகளூரில் தேரோட்டம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், பக்தர்களின் பால்குடம் ஊர்வலம், சுவாமி வீதி உலா நடந்தது. தேரோட்டத்தையொட்டி நேற்று மதியம் உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





