உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மே 1ஆம் தேதி சித்திரை தேரோட்டம்


உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மே 1ஆம் தேதி சித்திரை தேரோட்டம்
x

பக்தர்கள் வழிபட ஏதுவாக 14 இடங்களில் தேரை நிறுத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தஞ்சாவூர்,

மே 1ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு பெரியகோவில் தேரை அலங்கரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேரை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியை மேற்கொள்ளும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தேரின் மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் அமைத்து வண்ண வண்ண துணிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்கள் வழிபட ஏதுவாக 14 இடங்களில் தேரை நிறுத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


Next Story