உத்திர ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் தேரோட்டம்


உத்திர ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் தேரோட்டம்
x

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

வேலூர்

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சூரிய பிரபை, சந்திர பிரபை, அனுமந்த வாகனம், கருட வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. உத்திர ரங்கநாத பெருமாள் தேரில் எழுந்தருலி வீதி உலா வந்தார். பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் மிளகு, உப்பு உள்ளிட்டவைகளை தேர் மீது தூவி வணங்கினர். முக்கிய வீதிகளின் வழியாக சென்று பகல் 1.30 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடியாத்தம் பள்ளிகொண்டா சாலையில்தேர் பவனி வருவதால் வாகனங்கள் வேறுபபாதையில் மாற்றி அமைக்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.


Next Story