சென்னை: 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம் - போலீசார் விசாரணை


சென்னை: 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம் - போலீசார் விசாரணை
x

வியாசர்பாடியில் 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்து உள்ளது.

சென்னை,

சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் 20-வது தெருவில் இன்று மதியம் குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கின.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சத்தியமூர்த்தி நகர் மற்றும் கொருக்குப்பேட்டை இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் அந்த அப்பகுதியில் இருந்த சுமார் 12 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. மதிய நேரம் என்பதாலும் பெரும்பாலானவர்கள் வேலைக்கு சென்று இருந்த காரணத்தினாலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் வீட்டில் இருந்த பீரோ துணிமணிகள் சமையல் பாத்திரங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த தகவல் அறிந்த பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து.

மேலும் இந்த தீ விபத்து குறித்து எம்கேபி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story