சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - வாலிபர் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - வாலிபர் கைது
x

சென்னை விமான நிலையத்தில் உகாண்டாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகிக்கும்படி வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த லுபன் பங்கிரே(வயது 26) என்பவரை அதிகாரிகள் விசாரித்தனர்.

விசாரனையில் அவர் சுற்றுலா வந்ததாக கூறி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரின் உடமைகளை சோதனை செய்த போது எதுவும் இல்லை .பின்னர் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்ததில் அவரது வயிற்றில் ஏதோ மர்ம பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரது வயிற்றை ஸ்கேன் செய்ததில் அதிகமான மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து இனிமா தந்து வயிற்றில் கடத்தி வந்த பொருளை கைப்பற்றினர். அதனை சோதனை செய்ததில் ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது.

ரூ. 5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 794.64 கிராம் எடைக் கொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உகாண்டா வாலிபரை கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டது. இதன் பிண்ணனியில் யார் உள்ளனர் என விசாரணை நடந்தி வருகின்றனர்.


Next Story