சென்னை டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை


சென்னை டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
x

கோவளம் அருகே சென்னை டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே செம்மஞ்சேரி குப்பம் பகுதியில் சென்னையை சேர்ந்த டாக்டர் ராமலிங்கத்துக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அவரது தோட்டத்தில் தேசிங்கு (வயது 65) என்பவர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த திங்கட்கிழமை அன்று தேசிங்கின் மகன் மேகநாதன் தனது தந்தையை தோட்டத்தில் சந்தித்து உணவு கொடுத்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நேற்று முன்தினம் அவரது மகன் மேகநாதன் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது தேசிங்கு அழுகிய நிலையில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தபோது தேசிங்கு தலைப்பகுதியில் சுத்தியலால் அடித்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தது தெரிய வந்தது.

பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் ரத்தக்கறையுடன் இருந்த சுத்தியலை போலீசார் கைப்பற்றினர். இடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story