சென்னை: ரேஷன் கடையில் உணவு பொருட்களின் தரம் குறித்து ஜெ.ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு


சென்னை: ரேஷன் கடையில் உணவு பொருட்களின் தரம் குறித்து ஜெ.ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு
x

ராயபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரத்தை பரிசோதித்து பார்த்தார்.

சென்னை,

தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளராக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றது முதல் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தங்கு, தடையின்றி தரமாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுதவிர மாவட்டங்கள்தோறும் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், 'நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை' என்ற திட்டத்தின் ஒரு அங்கமாக சென்னை ராயபுரத்தில் உள்ள அமுதம் ரேஷன் கடைகளில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோனில் வைக்கப்பட்டு இருந்த அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவற்றின் தரத்தை பரிசோதித்து பார்த்தார்.


Next Story