சென்னை மெட்ரோ ரெயில் கட்டண சலுகை மேலும் ஒருநாள் நீட்டிப்பு


சென்னை மெட்ரோ ரெயில்  கட்டண சலுகை மேலும் ஒருநாள் நீட்டிப்பு
x

சென்னை மெட்ரோ ரெயிலில் அடித்தள நாளை முன்னிட்டு கட்டண சலுகை வரும் 17 ஆம் தேதியும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரெயிலில் ரூ.5 என்ற கட்டணப் பயணத்தில் வரும் 17.12.2023 அன்றும் பயணிக்கலாம். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) நாளை ஒரு நாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரெயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக நாளை (03.12.2023) கனமழை, புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (03.12.2023) பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தினால் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.

மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ரூ.5 என்ற பயணக்கட்டணத்தில் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் பயணிகள் பயணிக்கலாம். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.


Next Story