சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் - ககன்தீப் சிங் பேடி ஆய்வு


சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் - ககன்தீப் சிங் பேடி ஆய்வு
x

தேனாம்பேட்டையில் நடந்து வரும் கட்டிடப்பணி, மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட நுங்கம்பாக்கம் பள்ளிச்சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.8 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப்பணி, டாக்டர் பெசன்ட் தெருவில் ரூ.2.46 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணி, கிருஷ்ணாம்பேட்டை மயானபூமியில் ரூ.48 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை பணி, தைபூர் அலிகான் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.4.10 லட்சம் செலவில் கழிவறை அமைக்கும் பணி ஆகியவற்றை இன்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க நிதியின் கீழ் ரூ.6.25 லட்சம் செலவில் கானாபாக் தெருவில் அமைக்கப்பட்டு வரும் நல மையத்தின் கட்டிடப் பணிகளையும் கமிஷனர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Next Story