பள்ளி மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டிகள்


பள்ளி மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டிகள்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு செஸ் போட்டிகள்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் 116 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9, மற்றும் பிளஸ்-1, பிளஸ் -2 ஆகிய 4 பிரிவுகளில் செஸ் போட்டிகள் கடந்த 3 நாட்கள் நடத்தப்பட்டது.

இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி அளவில் மட்டும் போட்டியில் நடத்தப்பட்டது.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு, பிளஸ் -1, பிளஸ் -2 என 3 பிரிவுகளில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகள் தனித்தனியே வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள்.

வட்டார அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ- மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 3 பிரிவுகளில் தனித்தனியே மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

இப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெறும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ -மாணவிகள் 2 பேர் மாநில அளவிலான பயிற்சி முகாம் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெறும் 9-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -1, பிளஸ் -2 வகுப்பு ஆகிய இரு பிரிவு மாணவ -மாணவிகள் மாமல்லபுரத்தில் நடக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வருகிற 7-ந் தேதி பார்வையிட செல்வார்கள்.



Related Tags :
Next Story