செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரஷ்ய செஸ் கூட்டமைப்பினர் மாமல்லபுரத்தில் ஆய்வு


செஸ் ஒலிம்பியாட் போட்டி:  ரஷ்ய செஸ் கூட்டமைப்பினர் மாமல்லபுரத்தில் ஆய்வு
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கத்தை ரஷ்ய செஸ் கூட்டமைப்பினர் ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர், நடுவர்கள், செஸ் கூட்டமைப்பினர் என 3 ஆயிரம் பேர் வருகிறார்., அவர்கள் இன்று முதல் வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரஷ்ய செஸ் கூட்டமைப்பினர் மற்றும் அவர்களுடன் வேறு சில நாட்டவர்களும் "செஸ் ஒலிம்பியாட்" நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இவர்கள் வெளிநாட்டு வீரர்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் போர்டு, இணையதள வசதி, அரங்கத்தின் குளிர் அளவு, மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு, பயணம் செய்யும் வாகனம், நிறுத்தும் இடங்கள், சி.சி.டி.வி கேமரா பகுதிகள், உலக நாடுகளின் நேரம் காட்டும் கடிகாரம் அமைப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் குறித்து இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இன்று சென்னை விமான நிலையம் வரும் வெளிநாட்டு வீரர்கள் முதலில் பாதுகாப்பாக அவர்கள் தங்கும் விடுதிக்கு செல்கிறார்கள்., பின்னர் 28-ம் தேதி ஒலிம்பியாட் துவங்கும் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு அதற்கு தயாராக உள்ளனர்.


Next Story